பாரீசில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் வசிக்கும் நிநிட்டி என்ற ஓவியம் வரைந்து பிரபலமான ஒராங்குட்டான் வகை குரங்கு 50 வயதை நெருங்கி உள்ளது என்று பூங்கா நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிநிட்டி ஒராங்குட்டான் குரங்கிற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். காரணம் இந்த ஒராங்குட்டான் குரங்கிற்கு ஓவியம் வரைவது என்றால் அவ்வளவு விருப்பம். இது ஓவியம் வரைவதை பார்க்கவே அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் இந்த பூங்காவிற்கு வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
1972ஆம் ஆண்டு இந்த வனவிலங்குகள் பூங்காவிற்கு Borneo இல் பிறந்த இந்த ஒராங்குட்டான் குரங்கு 3 வயதாக இருக்கும் போது வந்து சேர்ந்தது. எதையும் சொல்லிக் கொடுத்தால் "கப்"பென்று கற்றுக் கொள்ளும். ஆனால் இதற்கு என்று ஒரு தனித்திறமை இருந்தது. பயிற்றுவிக்கப்படாமலே ஓவியம் வரைய ஆரம்பித்தது இந்த ஒராங்குட்டான்.
கிரேயான், வாட்டர் கலர் என கலர் பென்சில்கள் அனைத்தையும் பயன்படுத்தி இது ஓவியம் வரைய ஆரம்பித்தது. இதன் முக்கிய பொழுதுபோக்கே ஓவியம் வரைவது தான் என்பதுபோல் மாறியது. இந்த பூங்காவிற்கு கடந்த 1999 இல் வேலைக்கு சேர்ந்த கிறிஸ்டில் ஹானே என்பவர்தான் இன்று வரை இந்த ஒராங்குட்டானை பராமரித்தும்இ கவனித்தும் வருகிறார்.
தற்போது இந்த ஒராங்குட்டானுக்கு 50 வயது ஆக போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வயதிலும் இது அசால்ட்டாக ஓவியம் வரைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒராங்குட்டானின் 50வயது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.